Friday 5 September 2014

வடகிழக்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு பணி

உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வடகிழக்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பளுதூக்கும் பிரிவு (ஆண்)- 02
ஹேண்ட் பால் (ஆண்) - 04
ஹேண்ட் பால் (பெண்) - 05
தடகளம் (ஆண்) - 01
தடகளம் (பெண்) - 02
வாலிபால் (ஆண்) - 02
எடைதூக்கும் பிரிவு (பெண்) - 02
நீச்சல் (ஆண்) - 04
கால்பந்து (ஆண்) - 03
கிரிகெட் (ஆண்) - 03
கோல்ஃப் (ஆண்) - 01
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ தகுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது +2 வகுப்பில் அறிவியல் பிரிவு அல்லது ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம்
பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ரூ.100. இதனை சீனியர் பெர்சனல் ஆபிசர், ஆர்.ஆர்.சி., வடகிழக்கு ரயில்வே, கோரக்பூர் என்ற முகவரிக்கு மாற்றத்தக்க வகையில் இந்தியன் போஸ்டர் ஆர்டராக எடுத்து அனுப்ப வேண்டும்.

விளையாட்டு தகுதியின் அடிப்படையில் இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவதால் விண்ணப்பதாரர்கள் நம் நாட்டு சார்பாக ஒலிம்பிக்
விளையாட்டு, உலகக்கோப்பை, ஆசிய விளையாட்டுப் போட்டி, காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள், தெற்காசிய விளையாட்டு போட்டிகள், தேசிய அளவிலான அல்லது மாநில அளவிலான போட்டிகளிலாவது குறைந்தபட்சம் மூன்றாவது நிலையில் வெற்றி பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Senior Personal Officer, RRC, North Building Railway Road, No.14,
Gorakhpur - 273012.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 08.09.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விபரங்கள் அறிய www.ner.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment