Monday 7 July 2014

தமிழக அரசில் புள்ளியியல் ஆய்வாளர் பணி: டிஎன்பிஎஸ் அறிவிப்பு

தமிழக அரசின் கால்நடைத் துறையில் காலியாக உள்ள புள்ளியியல் ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: புள்ளியில் ஆய்வாளர்
காலியிடங்கள்: 06
சம்பளம். மாதம் 9,300 - 4,800 + தர ஊதியம் ரூ.4800.
வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: புள்ளியியல், கணிதம் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. (தேர்வுக்கட்டணம் ரூ.100 + விண்ணப்பக் கட்டணம் ரூ.50) இதனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையிலும் செலுத்தலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.07.2014
மேலும் எழுத்து தேர்வு மற்றும் தகுதி மதிப்பெண்கள், வயதுவரம்பு சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் www.tnpsc.gov.in பார்க்கவும்

No comments:

Post a Comment