Thursday 17 July 2014

+2 முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் பணி: யுபிஎஸ்சி அறிவிப்பு

தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய கப்பற்படை அகாடமி பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற்று பின்னர் ராணுவம், விமானப்படை மற்றும் கப்பற்படைகளில் அதிகாரி அந்தஸ்தில் உள்ள பணிகளில் சேருவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்வு நடைபெறும் தேதி: 28.9.2014
பயிற்சிகள் தொடங்கும் தேதி: தேசிய பாதுகாப்பு அகாடமியில் 134வது கோர்ஸ் மற்றும் கப்பல் படை அகாடமியின் 96வது +2 கோர்ஸ்கள் பயிற்சிகள் 02.07.2015 அன்று தொடங்க உள்ளது.
மொத்த காலியிடங்கள்: 375 (தேசிய பாதுகாப்பு அகாடமி - 320 (ராணுவம் - 208, கப்பற்படை - 42, விமானப்படை - 70) மற்றும் இந்திய நேவல் அகாடமி - 55).
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 2.1.1996க்கு முன்போ அல்லது 1.1.1999க்கு பின்போ பிறந்திருக்கக் கூடாது. திருமணமாகாத ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதி: தேசிய பாதுகாப்பு அகாடமியின் ராணுவ பிரிவிற்கு விண்ணப்பிப்பவர்கள் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய பாதுகாப்பு அகாடமியின் விமானப்படை, கப்பற்படை பிரிவு மற்றும் கப்பற்படை அகாடமியின் 10 +2 பிரிவிற்கு விண்ணப்பிப்பவர்கள் இயற்பியல், கணிதம் பாடப்பிரிவில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். +2 தேர்வு எழுத இருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

உடற்தகுதிகள்: மார்பளவு: 81 செ.மீ., 5 செ.மீ., விரிவடையும் நிலையில் இருக்க வேண்டும். 15 நிமிடங்களில் 2.4 கி.மீ தூரம் ஓடி கடக்க வேண்டும். புஷ்அப் - 20, சிட்அப் - 20, சின்அப் - 8. 3-4 மீட்டர் வடம் ஏறுதல், ஸ்கிப்பிங் ஆகியவற்றில் வெற்றி பெற வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செலான் படிவத்தை பதிவிறக்கம் செய்து எஸ்பிஐ வங்கியின் கிளைகளில் ரொக்கமாக செலுத்த வேண்டும். நெட் பேங்கிங் முறையில் செலுத்தலாம்.
தேர்வுகள்: தேர்வுகள் இரண்டு கட்டங்களாக 3 முதல் 4 நாட்கள் வரை நடைபெறும்.
முதல் நாள் உளவியல் திறன் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே அடுத்த கட்ட தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். அதன் பின்னர் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
தேர்வு மையங்கள்: எழுத்துத்தேர்வு தமிழகத்தில் சென்னை, மதுரை ஆகிய இடங்களில் நடைபெறும். தேசிய பாதுகாப்பு அகாடமியின் ராணுவம், கப்பற்படை, விமானப்படை பிரிவுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 3 ஆண்டுகள் கல்வி மற்றும் பாதுகாப்பு பிரிவு பயிற்சிகள் அளிக்கப்பட்டு முடிவில் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தால் பிஎஸ்சி, பிஎஸ்சி (கம்ப்யூட்டர்), பி.ஏ., பட்டங்கள் வழங்கப்படும்.
கப்பற்படை அகாடமி (பிளஸ் 2 பிரிவு)க்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 4 வருட பி.டெக்., பயிற்சி அளிக்கப்பட்டு பட்டம் வழங்கப்படும். இதன் பின்னர் ராணுவ பிரிவினருக்கு டேராடூனிலும், கப்பற்படை பிரிவினருக்கு கொச்சியிலும், விமானப்படை பிரிவினருக்கு ஐதராபாத்திலும் ஒரு வருட பயிற்சி அளிக்கப்பட்டு அதன் பின்னர் பணியில் அமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.upsconline.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.upsc.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment