Friday 18 July 2014

விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் பணி

விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் கப்பற்படை கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள டிரேட்ஸ்மேன் பணியிடங்களை நிரப்ப பத்தாம் வகுப்பு முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டிரேட்ஸ்மேன் மேட்.
காலியிடங்கள்: 299 (பொது - 152, ஒபிசி - 82, எஸ்சி - 45, எஸ்டி - 20). இவற்றில் 10 சதவிகித இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும், 3 சதவிகித இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும், 5 சதவிகித இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
வயது வரம்பு: 21.07.2014 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட பின்னர் தகுதியானவர்களுக்கு தேர்வுகளில் பங்கேற்பதற்கான அனுமதி கடிதம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: உடல் திறன் தேர்வு, எழுத்துத்தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். உடல் திறன் தேர்வு அனைத்துப் பிரிவினருக்கும் கட்டாயமானதாகும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விரைவு அஞ்சல் அல்லது பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
The Admiral Superintendent (for CAO),
Naval Dockyard, Visakhapatnam 530014.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.07.2014.
மேலும் விண்ணப்பிக்கும், தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.godiwadabhartee.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment