Monday 28 July 2014

முப்படைகளில் ஓய்வு பெற்றவர்களுக்கு இந்திய கடலோர காவல்படையில் இசைக் கலைஞர் பணி


மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய கடலோர காவல் படையில் நேவிக் (இசைக்கலைஞர்) பணிக்கு முப்படைகளிலிருந்து ஓய்வு பெற்ற இசைக்கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:  ஜேசிஓ, பேண்ட் மாஸ்டர் - 01
கல்வித் தகுதி: ராணுவம், கடற்படை, விமானப்படை போன்ற ஏதாவதொன்றில் ஜேசிஓ அல்லது அதற்கு சமமான தகுதியில் பணிபுரிந்திருக்க வேண்டும்.
பணி: நேவிக் (இசைக்கலைஞர்கள்) - 11
கல்வித் தகுதி: ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றிலிருந்து பெட்டி அதிகாரியாக அல்லது அதற்கு கீழ்நிலை அதிகாரியாக பணிபுரிந்திருக்க வேண்டும்.
பேண்ட் மாஸ்டர், இசைக்கலைஞர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் சாக்ஸபோன், கிளாரினெட், எப் ஹாம், டிரெம்பெட், டேனர் டிராம்போன், இபி பாஸ், டிரம்மர், புளுட்,
பிக்கோலோ ஆகிய இசைக்கருவிகளை இசைக்க தெரிந்திருக்க வேண்டும்.
இந்தப் பணி ஏற்கனவே ராணுவம், கடற்படை, விமானப்படையில் பணிபுரிந்தவர்களுக்கு அளிக்கப்படும் மறு வேலைவாய்ப்பாகும். அவர்கள் கடைசியாக பணியாற்றிய தகுதியிலேயே மீண்டும் பணியமர்த்தப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Recruitment Officer,
Post Box No.127, A1, Sec24,
Noida (U.P.), PIN: 201301.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2014
மேலும் மாதிரி விண்ணப்பங்கள், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment