Thursday 3 July 2014

டிப்ளமோ தகுதிக்கு செயில் நிறுவனத்தில் பணி

மத்திய அரசின் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் எனும் உருக்கு ஆலையில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்கள் நேரடியாகவும் பயிற்சிக்குப் பிறகான பணி என இரு நிலைகளாக நிரப்பப்படுகின்றன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: டெக்னீசியன்
காலியிடங்கள்: 473
ஆப்ரேட்டர் கம் டெக்னீசியன் - 290
அட்டெண்டன்ட் கம் டெக்னீசியன் - 169. இந்த பணியிடங்கள் அனைத்தும் பயிற்சிக்கு பின்பு பணியமர்த்தப்படுவார்கள்.
ஆப்ரேட்டர் கம் டெக்னீசியன் - 09
அட்டெண்டன்ட் கம் டெக்னீசியன் - 05. இந்த பணியிடங்கள் அனைத்தும் நேரடியாக பணியமர்த்தப்படுவார்கள்.
கல்வித் தகுதி: ஆப்ரேட்டர் கம் டெக்னீசியன் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன்  3 வருட வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அட்டெண்டன்ட் கம் டெக்னீசியன் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 28-35க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.07.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, பயிற்சி விவரங்கள். தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.sail.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment